BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 14 August 2013

நீர்மூழ்கி கப்பலில் தீ.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சுந்துரக்‌ஷக் என்ற கப்பல் மும்பை கடற்கரை பகுதியில் பாதுகாப்பு சோதனைகளுக்காக நின்று கொண்டிருந்தது, இன்று அதிகாலை திடீரென்று பெரும் சத்தத்துடன் அது தீ பற்றி எரிந்தது.

கடற்கரையில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், நீர்மூழ்கி கப்பல் மேல்தட்டில் இருந்த நான்கு பேர் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளதாக தெரிகிறது, மேலும் நீர்மூழ்கி கப்பலுக்குள் 18 க்கும் மேற்பட்ட கப்பற்படை அதிகாரிகளும் வீரர்களும் இருந்ததாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிர் சேதம், பொருட்சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை, இந்த விபத்திற்கு காரணம் நீர்மூழ்கி கப்பலின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டதா அல்லது நாட்டின் அமைதியை குலைக்க வேறு தீவிரவாத அமைப்புகள் செய்த சதியா என விசாரணை நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு மூன்று கட்டமைப்புகளாக அதிகபடுத்த வேண்டும் என உளவுதுறை எச்சரித்துள்ளது, தமிழகமெங்கும் உள்ள ரயில்நிலைங்கள் மற்றும் பேருந்து நிலைங்களில் தொடர் சோதனை காவல்துறையால் நடந்து கொண்டிருக்கிறது, நாளை இந்தியாவின் 67 வது சுதந்திரநாள் என்பது குறிப்பிடதக்கது.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media