BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 September 2013

மன்மோகன்சிங்குக்கு ஏதேனும் சுயமரியாதை இருந்தால் அவர் பதவி விலக வேண்டும் - அருண் ஜேட்லி.

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் பெரும் சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது.



இந்த சட்டம் முட்டாள்தனமானது என்று ராகுல் காந்தி சொன்னாலும் சொன்னார். மன்மோகன் சிங்கின் சுய மரியாதையை குறி வைத்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"ராகுல் காந்தி கூறுவது போல் முட்டாள்தனமான அரசின் பிரதமர் மன்மோகன்சிங் பதவியில் தொடரலாமா? அப்பதவியில் இருந்து விலகி தனது தன்மானத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்கிறார் மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடு.

"பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏதேனும் சுயமரியாதை இருந்தால் அவர் பதவி விலக வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங்கின் சுயமரியாதை குறித்து நாடு எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது என்று கூறி உள்ளார் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media