இயக்குனர் பாரதிராஜாவுக்கு எப்போது ரோசம் பொத்துக்கொண்டு வரும், எப்போது அது அடங்கி போகும் என்று யாருக்கும் தெரியாது. திடீரென ஈழம் என்பார், மெளனவிரதம் என்பார், திடீரென எல்லாவற்றையும் சைலண்ட்டாக்கி கொள்வார். இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் பாராதிராஜாவின் தலையையே காணவில்லை.
ஞானக்கிறுக்கன் படத்தின் இசையை வெளியிட்டு விழாவில் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே. செல்வமணி வருத்தப்பட்டார், பின் பேசிய பாரதிராஜா தமிழ் திரையுலகுக்கு முதுகெலும்பு கிடையாது. தென்னிந்திய வர்த்தக சபை என்று இருப்பதில் தனக்கு உடன்பாடு கிடையாது என்றும் பல வருடங்களாக இதை எதிர்த்து வருகிறோம்.
மொழி வாரி மாநிலம் உருவாகிய பின் தெலுங்கு, கன்னட, மலையாள சங்கங்கள் உருவாகிய பின் நமக்கு தனியாக தமிழ் சங்கமாக உருவாக்காமல் இன்னமும் தென்னிந்திய சங்கம் என்று ஏன் வைக்க வேண்டும் என்று பேசினார். இவ்வளவு பேசினாலும் நேரடியாக சினிமா நூற்றாண்டு விழா குறித்து விமர்சிக்கவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.