ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது தமிழகமெங்கும் காங்கிரஸ்சை ஒழிப்பதே என் முதல்பணி என்று சுற்றி சுற்றி பேசி வந்த திருமாவளவன்
2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்து ஒரு எம்பி தொகுதியிலும் வென்றார்.
அதன் பிறகு சில நாட்களில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதும், விடுதலைப்புலிகள் இயக்கமே முழுவதும் அழிக்கப்பட்டும் ஈழத்தமிழர்கள் 40,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டதும் ஆதாரப்பூர்வமாக வெளியானது, அதற்கு காரணம் காங்கிரஸ்சின் உதவி என்று மீண்டும் தமிழகம் முழுதும் சுற்றி வந்து உசுப்பேற்றினார் திருமாவளவன், ஆனாலும் மீண்டும் 2011ல் அதே திமுக-காங்கிரஸ் கூட்டணியுடன் சட்டசபை தேர்தலை சந்தித்து ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத நிலை ஆனது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு.
இந்நிலையில் இன்று பேசிய திருமாவளவன்
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றாலும் அந்த கூட்டணியில் நாங்கள் இருப்போம். அதற்காக எங்கள் கொள்கைகளை என்றும் விட்டு கொடுக்க மாட்டோம்.
திருச்சி மோடிக்காக வந்த கூட்டத்தால் தமிழக அரசியல், லோக்சபா தேர்தலில் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று தெரிவித்து உள்ளார்.
# 2009ல் ஈழத்தமிழர்கள் செத்து சுண்ணாம்பாகும் போதே காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தீர்கள், இனி நீங்கள் வைத்தால் என்ன? வைக்கவில்லை என்றால் என்ன?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.