BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 September 2013

செம்மொழி மாநாட்டில் ஊழல்? அதிகாரிகளை போட்டுக்கொடுக்கும் திமுக தலைவர் கருணாநிதி


தனக்கு தானே கேள்வி-பதில் திட்டத்தில் இன்று செம்மொழி மாநாட்டு ஊழல் பற்றி குறிப்பிட்ட திமுக தலைவர் கருணாநிதி


கேள்வி:- கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டுக்காக செய்யப்பட்ட செலவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, யாரோ ஒருவர் தாக்கல் செய்த வழக்கின் மீது உங்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது என்று இரண்டொரு ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

என்ற தன் கேள்விக்கு

இதுபோல அரசு நடத்தும் மாநாட்டிற்கான செலவினை முதலமைச்சரோ, அமைச்சர்களோ, உறுப்பினர்களோ கையிலே வைத்துக்கொண்டு செலவு செய்வதில்லை.

அதிகாரிகள்தான் செலவு செய்வார்கள். மாநாடு நடைபெற்ற நேரத்தில் நிதித்துறை செயலாளராக யார் இருந்தாரோ அவர்தான் தற்போதும் செயலாளராக இருக் கிறார். மாநாடு நடைபெற்றபோது கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து செயல் பட்டவர் தற்போது நிதித்துறையிலேதான் பணியாற்றுகிறார். இந்த செம்மொழி மாநாட்டிற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனி அதிகாரி யாகவே நியமிக்கப்பட்டார். இந்த மாநாட்டிற்காக செலவு செய்யப்பட்ட தொகை குறித்து அப்போது மாநாட்டை நடத்தும் பொறுப்பை மேற் கொண்டவர்களுக்கு எந்தத் தொடர்பாவது இருந்ததா என்பதை இந்த மூத்த அதிகாரிகள் இடத்திலும், அவர்கள் கையாண்ட கோப்புகளை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

என்று அதிகாரிகளை போட்டுக்கொடுத்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media