BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 September 2013

காதலன் குடிப்பழக்கத்தை கைவிட வைக்க உயிரை விட்ட காதலி

காதல் இவர்களை மெண்டல் ஆக்குகிறதா? மெண்டல்கள் காதலிக்கிறார்களா? என்றே தெரியவில்லை.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (22) பள்ளிக்கரணையில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார், அவரை ரூபிணி என்ற மாணவி காதலித்து வந்துள்ளார், சதீசும், ரூபிணியும் 4 ஆண்டாக காதலித்துள்ளனர். இதை அறிந்த இருவரது பெற்றோரும் அவர்களுக்கு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவுஎடுத்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் சதீஷ் குடிபோதையில் ரூபிணி வீட்டுக்கு சென்றுள்ளார், இதனால் எரிச்சலான ரூபிணி நமக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்றார். ஆனால் சதீஷோ குடிபோதையில், நான் குடியை விடவேண்டும் என்றால் நீ உயிரை விடவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ரூபிணி உடனே வீட்டுக்குள் சென்று அறைக்கதவை சாத்தி கொண்டார். இதனால் சதீஷ் அங்கிருந்து சென்றார். சிறிது நேரம் கழித்து அவரது அம்மா கதவை தட்டியபோது திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் சத்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்துள்ளனர். அங்கு ரூபிணி மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கியதை பார்த்து திடுக்கிட்டனர். ரூபிணியின் அம்மா அளித்த புகாரில் தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலிசார் அவரை தேடி வருகின்றனர்.

# நல்ல பசங்க நாலு கோடி பேர் இருக்க அதெப்படி கழிசடைகளை தேடிப்பிடித்து காதலிக்கிறீர்கள் பெண்களே?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media