BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 September 2013

சோனியா கும்பலுக்காக பாவமூட்டை சுமந்து அவமானப்படுத்தப்பட்ட மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் - வைகோ

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும், 9½ ஆண்டுகளாக சோனியா காந்தியும், அவரது கூட்டமும் செய்த பாவங்களை சுமந்ததற்கு தான் இந்த அவமானமா - வைகோ குமுறல்

இன்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டதாவது



நேற்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அரைவேக்காடு தனமாக ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களை பாதுகாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, எதிர்ப்பை அடுத்து மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது, பிரதமர் தலைமையில் காபினட் மந்திரிகள் கூட்டத்தில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது, அப்போதெல்லாம் எங்கே போனார் ராகுல் காந்தி.

9½ ஆண்டுகளாக சோனியா காந்தியும், அவரது கூட்டமும் செய்த பாவங்களை சுமந்தாரே அதற்கு காட்டும் மரியாதையா?. ராபர்ட் வதேரா மீது குற்றச்சாட்டு வந்தது. அப்போது ராகுல் காந்தி எங்கு இருந்தார்?. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் வந்த போது ராகுல்காந்தி கருத்து தெரிவிக்கவில்லையே. அவர் எங்கே இருந்தார். நாட்டு மக்களை ஏமாற்ற முடி யாது.

மன்மோகன் சிங், பொருளாதார மேதை. காங்கிரசின் மதிப்பை போன்று, ரூபா யின் மதிப்பு தரைமட்டமாகி வருகிறது. மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி கவர்ன ராக இருந்தார். அப்போது பஸ்சில் தான் பயணம் செய்தார். அவர் இதனை தன் மானத்துக்கு இழுக்கு என்று கூறி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். அவர் இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளக்கூடும். அவர் கட் சிக்கு களங்கம் ஏற்படுமோ என்று கருதாமல், பிரதமர் பதவிக்கு ஏற்பட்ட இழுக்கு என்று கருதி ராஜினாமா செய்ய வேண்டும்.

# சொரணை சோறு போடுமா வைகோ சார்? மானம் பிரதமர் பதவி வாங்கி தருமா வைகோ சார்? போங்க சார் போய் வேற வேலை எதுவும் இருந்தா பாருங்க சார், வந்துட்டாரு!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media