BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 12 November 2013

சரியாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கண்டித்ததால் 7 மாணவிகள் தற்கொலை முயற்சி

மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைப்பட்டியில் இயங்கி வரும் மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவரும் 7 பேரும் இணைபிரியா தோழிகள்.
இவர்கள் சரியாக படிப்பது இல்லை என ஆசிரியர்கள் தொடந்து கண்டித்து வந்துள்ளனர். சென்ற வாரம் இது போல மாணவிகளை ஆசிரியர்கள் கண்டித்தனர், இதனால் பள்ளி இடைவேளையின் போது பள்ளியின் பின்புறம் சென்ற அந்த 7 பேரும் தாங்கள் வாங்கி வைத்திருந்த விஷத்தை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.

இடைவேளை முடிந்த பின்னரும் மாணவிகள் கிளாஸ்க்கு வராததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள்  மாணவிகளை தேடிய போது, அவர்கள் மயங்கிக்கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மாணவிகள் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

# 7வது படிக்கும் போதே தற்கொலை முயற்சி, 8 வது படிக்கும் போது காதல், 9 வது படிக்கும் போது வீட்டை விட்டு ஓடுதல், மாணவர் சமுதாயம் இப்படி ஆக காரணம் என்ன?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media