மக்கள் நலப்பணியாளர்கள் 13,000 பேர் டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
திமுக, அதிமுக போட்டா போட்டிகளில் அடிக்கடி சிக்குவது மக்கள் நலப்பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள் போன்ற கடைநிலை ஊழியர்கள். ஒரு கழகம் ஆட்சிக்கு வரும் போது கட்சிக்காரர்கள் சிபாரிசு செய்பவர்களையெல்லாம்
தொகுப்பு சம்பளத்தில் ஏதேனும் ஒரு பணியாளர் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கில் வேலைக்கு சேர்த்துக்கொள்வது, இந்த மாதிரி பணியாளர்களை வேலைக்கு சேர்க்கும் போது எந்தவிதமான விதிமுறைகளும் அரசு வேலைக்கு சேர்ப்பதற்கான நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை, கட்சிக்காரர்கள் சிபாரிசே போதும் என்ற நிலை, இதற்கு கட்சிக்காரர்கள் இலட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொள்வது வழக்கம். எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காததால் இந்த பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பும் கிடையாது.
ஒரு கழக ஆட்சியில் சேர்க்கும் இம்மாதிரியான பணியாளர்கள் அந்த கழகத்தின் கட்சிகாரர்களாக இருப்பதால் அடுத்த கழகம் ஆட்சிக்கு வந்த உடன் நிதி சுமையை குறைக்கிறோம் என்று இவர்களை வீட்டுக்கு அனுப்புவதும் அடுத்த திமுக ஆட்சியில் அவர்களை திரும்ப சேர்ப்பதும் அதிமுக ஆட்சி வந்தால் திரும்ப அனுப்புவதுமான பரம பத விளையாட்டு நடைபெறுகிறது.
இந்த முறை அதிமுக ஆட்சிபொறுப்பேற்ற உடன் திமுக ஆட்சியில் சேர்க்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,000 பேரை டிஸ்மிஸ் செய்தனர், இந்த டிஸ்மிசை நீக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த டிஸ்மிசை நீக்க மறுத்தது, பின் தற்போது உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மக்கள் நலப்பணியாளர்களை டிஸ்மிஸ் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். அத்துடன் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கவும் உத்தரவிட்டனர்.
# டாஸ்மாக் ஊழியர்கள் மட்டுமே தப்பி பிழைக்கிறார்கள், ஒவ்வொரு ஆட்சியிலும் இவர்கள் சேவை தேவை என்பதால்.
திமுக, அதிமுக போட்டா போட்டிகளில் அடிக்கடி சிக்குவது மக்கள் நலப்பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள் போன்ற கடைநிலை ஊழியர்கள். ஒரு கழகம் ஆட்சிக்கு வரும் போது கட்சிக்காரர்கள் சிபாரிசு செய்பவர்களையெல்லாம்
தொகுப்பு சம்பளத்தில் ஏதேனும் ஒரு பணியாளர் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கில் வேலைக்கு சேர்த்துக்கொள்வது, இந்த மாதிரி பணியாளர்களை வேலைக்கு சேர்க்கும் போது எந்தவிதமான விதிமுறைகளும் அரசு வேலைக்கு சேர்ப்பதற்கான நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை, கட்சிக்காரர்கள் சிபாரிசே போதும் என்ற நிலை, இதற்கு கட்சிக்காரர்கள் இலட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொள்வது வழக்கம். எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காததால் இந்த பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பும் கிடையாது.
ஒரு கழக ஆட்சியில் சேர்க்கும் இம்மாதிரியான பணியாளர்கள் அந்த கழகத்தின் கட்சிகாரர்களாக இருப்பதால் அடுத்த கழகம் ஆட்சிக்கு வந்த உடன் நிதி சுமையை குறைக்கிறோம் என்று இவர்களை வீட்டுக்கு அனுப்புவதும் அடுத்த திமுக ஆட்சியில் அவர்களை திரும்ப சேர்ப்பதும் அதிமுக ஆட்சி வந்தால் திரும்ப அனுப்புவதுமான பரம பத விளையாட்டு நடைபெறுகிறது.
இந்த முறை அதிமுக ஆட்சிபொறுப்பேற்ற உடன் திமுக ஆட்சியில் சேர்க்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,000 பேரை டிஸ்மிஸ் செய்தனர், இந்த டிஸ்மிசை நீக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த டிஸ்மிசை நீக்க மறுத்தது, பின் தற்போது உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மக்கள் நலப்பணியாளர்களை டிஸ்மிஸ் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். அத்துடன் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கவும் உத்தரவிட்டனர்.
# டாஸ்மாக் ஊழியர்கள் மட்டுமே தப்பி பிழைக்கிறார்கள், ஒவ்வொரு ஆட்சியிலும் இவர்கள் சேவை தேவை என்பதால்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.