BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 12 November 2013

பெண்களின் திருமணவயதை 21 ஆக உயர்த்த கோரிக்கை - என்.ஜி.ஓ நிறுவனம் கோரிக்கை



பெண்களின் திருமணவயது தற்போது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது தற்போது 21 ஆகவும் உள்ளது, நாடக திருமணங்கள் நடைபெறுகின்றன என்று குற்றம் சாட்டி பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த கோரிக்கை வைத்தார் டாக்டர் ராமதாஸ்.
தற்போது ஆர்.வித்யாசாகர், சைல்ட் ப்ரொட்டகக்சன் ஆபிசர், யுனிசெப் என்ற என்.ஜி.ஓ நிறுவனத்தின் அதிகாரியும் பெண்கள் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகமாக 18 வயதுக்கு குறைவான திருமணங்கள் நடைபெறுகிறது என்கிறார். குறைந்த வருவாய் பிரிவில் உள்ளவர்களின் பெண்களின் திருமண வயது 16.4 ஆக உள்ளது என்றும் மிடில் கிளாஸ்சிலோ 20 ஆக உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது மட்டுமின்றி அதை சரியாக கண்காணித்து அமல் படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதே கோரிக்கையை பல என்.ஜி.ஓக்கள் வைத்துள்ளன.

இதே போன்ற கோரிக்கையை கேரள மாநில பெண்கள் ஆணையமும் திருமண வயதை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது, கர்நாடகாவில் இது தொடர்பான வழக்கு ஒன்றும் உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media