BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 10 November 2013

தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது அதிமுக - திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

ஏற்காடு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பே தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது அதிமுக - திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்


கேள்வி :- ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகளையெல்லாம் ஆளுங்கட்சி மீறுவதாகச் சொல்லப்படுகிறதே?

பதில் :- தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்று முதல் அமைச்சரும் கேட்கிறார்; மாவட்ட ஆட்சித் தலைவரும் கேட்கிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை காலில் போட்டு மிதித்து விட்டு, ஏற்காட்டில் இடைத் தேர்தல் நடத்துகிறார்களாம்!

மேலும் இது குறித்து குறிப்பிட்ட திமுக தலைவர் கருணாநிதி

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இடைத்தேர்தல்கள் வருவதுண்டு. ஆனால் தற்போது  அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது நடைபெறுவதைப் போல எந்த இடைத் தேர்தலிலும்,  வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பிருந்தே தேர்தல் விதிமுறை களைக் காற்றில் பறக்கவிட்டு, அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் செயல்கள் நடை பெற்றதில்லை. ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுவே 9-11-2013 முதல்தான்  தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்குள் அங்கே நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள்தான் எத்தனை? எத்தனை? எண்ணற்ற விதிமுறை மீறல்கள்; எல்லை மீறிய சேட்டைகள்!

# தலைவரே திருமங்கலம் இடைத்தேர்தலை விடவா?

# தலைவரே, பை எலக்சன் சூப்பர் ஸ்டார் அஞ்சாநெஞ்சன் அழகிரியை ஏற்காடு களத்தில் இறக்கிவிட்டு பாருங்களேன்



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media