அறுபது வருடங்களாக தன் மேல் தண்ணீரே படாமல், கெட்டு போன முள்ளம்பன்றி இறைச்சி மட்டுமே உணவு என இரானில் உள்ள ஹஜ் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வயது 80.
சுத்தமாக இருந்தால் தான் ஆரோக்கியம் கெட்டுவிடும் என இவர் நம்புகிறார். அதனால் அவர் அறுபது வருடங்களாக குளிக்க கூட இல்லை. உணவு கூட புதிதாக தயாரிக்கப்பட்டிருந்தால் அதை உட்கொள்வதில்லை. துருப்பிடித்த எண்ணெய் கேனில் இருந்து, தினமும் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பார். தலை முடியை வெட்ட மாட்டார், தேவைப்பட்டால், முடியை கொளுத்தி கொள்வார்.
இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சிங்க் என்கிறவர் இதற்கு முன், 38 வருடங்களாக குளிக்காமல் இருந்து இருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.