BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 15 January 2014

ராகுல் காந்தி மீது போலீஸில் புகார்

கடந்த திங்கட்கிழமை அன்று, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நூரநாட்டில் பாதயாத்திரையில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. அப்போது, அங்கு கூடியிருந்த கட்சியினர், ராகுல் காந்தியை பார்க்க முண்டியடித்தனர். இதனால், ராகுல் காந்தி, அருகில் இருந்த போலீஸ் வாகனத்தின் மீது ஏறி, கட்சியினரை பார்த்து கை அசைத்தார்.

இது குறித்து, ராகுல் காந்தி மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 123 ஐ மீறிவிட்டார், அதனால் அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் முஜீப் ரஹ்மான் நூரநாடு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பொது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினார் என்றும், அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தினார் என்றும் ராகுல் காந்தி மீது அளித்துள்ள அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புகாரின் பேரில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media