BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 15 January 2014

இரண்டு ஆண்டுகளில் 59 பெண்களை கற்பழித்த சேலம் கும்பல் கைது

இரண்டு ஆண்டுகளில் 59 பெண்களை கற்பழித்த சேலம் கும்பல் கைது


சேலத்தை சேர்ந்த 9 பேர் கொண்ட கற்பழிப்பு கும்பல் ஒன்று, ஆந்திராவில் உள்ள சித்தூரில் பிடிப்பட்டது. விசாரணையில், அவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில், 59 பெண்களை கற்பழித்து இருப்பது தெரியவந்தது.

இந்த கும்பல், பல‌ காதல் ஜோடிகள், திருமணமான ஜோடிகளை கண்கானித்து நெருங்கி, பின்பு, அவர்களிடம் உள்ள, பணம், பொருளை அபகரித்து விட்டு, பெண்ணையும் கற்பழித்து விட்டு சென்றுள்ளனர். விலைமாதர்களை கூட, இந்த கும்பல் கற்பழித்துள்ளது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, பங்காருபாலம் அருகே, ஒரு ஜோடி மீது, தாக்குதல் நடத்தி கொண்டிருக்கும் போது, இந்த கும்பல் போலீஸிடம் பிடிப்பட்டது. மேலும், இவர்கள், இரண்டு பேரை கொன்று புதைத்திருப்பதும் தெரிய வந்தது.

கற்பழிப்பு, கொள்ளை, கொலைகள் செய்த இந்த கும்பல் பற்றி 150 பேர் கொண்ட போலீசார் குழு விசாரணை நடத்தி வருகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media