BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 15 January 2014

1984ல், பஞ்சாப் பொற்கோவிலில் நடந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து உதவியதா?



1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தியின் ஆட்சியின் போது, பஞ்சாப்பில் உள்ள பொற்கோவிலை தாக்க ராணுவத்திற்கு, இங்கிலாந்து உதவியது என செய்தி வெளிவந்துள்ளது.

சீக்கியர்களின் பொற்கோவிலை தாக்குவதற்கு, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இங்கிலாந்து அரசின் உதவியை நாடியதாகவும், அதற்காக அப்போது இருந்த இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர் சிறப்பு விமானப்படையை கொடுத்து உதவி புரிந்தார் என்றும் லண்டனில் உள்ள ஒரு இணையதளம் இந்த திடுக்கிடும் செய்தியை வெளியுட்டள்ளது.

இதை பற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டுள்ளார்.

இந்திரா காந்தி அரசு, சீக்கியர்களின் கோவிலை தாக்க, இங்கிலாந்து உதவியை நாடியிருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என பா.ஜ.க தெரிவித்துள்ளது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media