BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 18 January 2014

இந்தியாவுக்கு போறிங்களா? ஜாக்கிரதையாக இருங்க என்று சொல்லும் நாடுகள்

டென்மார்க்கை சேர்ந்த 51 வயது பெண், சமீபத்தில் டெல்லியில், தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வழி கேட்ட போது, ஒரு கும்பலால், கத்தி முனையில் கற்பழிக்கப்பட்டார். அதற்கு முன்பு, மங்களூர்-சென்னை செல்லும் ரயிலில், இரவு நேரத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது, ஜெர்மனியை சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டார். இம்மாத தொடக்கத்தில், போலந்து நாட்டை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை வைத்து கொண்டு, டெல்லியில் டாக்ஸியில் செல்லும் போது, கற்பழிக்க பட்டிருக்கிறார்.

இது போன்ற தொடர் சம்பவங்களால், பெண் சுற்றுலா பயணிகளுக்கு, இந்தியா ஒரு அபாயகரமான இடம் என்ற பயத்தை உருவாக்கியிருக்கிறது. இதையடுத்து, பிரிட்டைன் மற்றும் பிரான்ஸ் நாடுகள், தங்கள் நாட்டு அரசு இணையதளத்தில், "இந்தியாவிற்கு செல்லும் பெண்கள் மிக மிக பத்திரமாக இருக்க வேண்டும் மற்றும், இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள் வெளிநாட்டு பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாக கூடும் என்று தெரிவிக்கன்றன" என்று அவர்கள் நாட்டு குடிமக்களுக்கு வலியுறுத்துகின்றன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media