BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 18 January 2014

மும்பையில் 18 பேர் நெரிசலில் மரணம்

102 வயதான ஆன்மிக குரு சையத்னா முகமத் பரானுதீன், மாரடைப்பால் நேற்று காலை மரணமடைந்தார். இவருக்கு இறுதி மரியாதை செலுத்த, ஆயிரம் கணக்கான மக்கள் குவிந்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணி அளவில், அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 18 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். திடீரென நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.

தாவூதி போரா இனமக்களின் ஆன்மிக குருவான சையத்னா முகமத் பரானுதீனுக்கு இன்று காலை, தெற்கு மும்பையில் உள்ள பேந்தி பஜாரில் இறுதி சடங்குகள் நடைபெறும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media