BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 18 January 2014

சசி தரூர் மனைவியின் மரணம் இயற்கையானது அல்ல‌



நேற்றிரவு டெல்லியில் உள்ளா லீலா பேலஸ் ஓட்டலில், மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா உயிர் இழந்து கிடந்தார். அவர் இறப்பிற்கு காரணம் மன உளைச்சல் மற்றும் அதிகமான தூக்க மாத்திரைகள் எடுத்து கொண்டு செய்து கொண்ட தற்கொலையாக இருக்கலாம் என்றும் சில யூகங்கள் சூழ்ந்து இருந்தது.  மேலும், அவர் உடல்நிலை அபாயகரமான நிலையில் இருந்தது என கேரளாவில் உள்ள மருத்துவமனையில் கூறியிருந்தனர்.

இந்நிலையில், சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் மரணம், இயற்கையாக நிகழ்ந்தது அல்ல என்றும், அவரின் உடலின் மேல் புறத்தில், காயங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளனர். அவர் விஷம் உட்கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை,  இரண்டு அல்லது மூன்று நாட்களில், முழு விவரங்களை அறிய முடியும் எனவும் கூறியுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு, சுனந்தாவின் உடல், சசி தரூரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அந்த உடலுடன் டெல்லியில் அவரது வீட்டுக்கு கொண்டு சென்றார்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media