நேற்று நடந்த காங்கிரஸ் கமிட்டியில், மணி சங்கர் அய்யர், "இந்த 21ம் நூற்றாண்டில், மோடி இந்திய நாட்டின் பிரதமராக வர முடியாது. வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டத்தில் தேநீர் விற்கட்டும்" என்று சர்ச்சைக்குரிய வகையில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பற்றி கருத்தி தெரிவித்து இருந்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பா.ஜ.க வினர், மயிலாடுதுறையில் உள்ள மணி சங்கரின் அலுவலகத்தில், கற்கள் எறிந்து, ஜன்னல்களை உடைத்தனர். இதை தொடர்ந்து, அவரின் அலுவலகத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்க பட்டிருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை செயலகம் உள்ள சத்யமூர்த்தி பவனில், பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு ஐம்பது பேர், தேநீர் விற்று, போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கும்பகோணத்திலும், மணி சங்கர் அய்யருக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜா.க ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஜம்மு&கஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லாவும், அய்யருக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ‘மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் நிறைய உள்ளது. ஆனால் அவரது அடிப்படை, அவர் வந்த விதம் சாதாரணமானவை, எளிமையானவை. நம்மிடம் அப்படிப்பட்ட அடிப்படை இல்லை. எனவே அவரை கேலி செய்வது , நமது பிரச்சாரத்திற்கு உதவாது." என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை செயலகம் உள்ள சத்யமூர்த்தி பவனில், பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு ஐம்பது பேர், தேநீர் விற்று, போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கும்பகோணத்திலும், மணி சங்கர் அய்யருக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜா.க ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஜம்மு&கஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லாவும், அய்யருக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ‘மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் நிறைய உள்ளது. ஆனால் அவரது அடிப்படை, அவர் வந்த விதம் சாதாரணமானவை, எளிமையானவை. நம்மிடம் அப்படிப்பட்ட அடிப்படை இல்லை. எனவே அவரை கேலி செய்வது , நமது பிரச்சாரத்திற்கு உதவாது." என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.