BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 18 January 2014

அமைச்சர் சசி தரூர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி

சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர், நேற்று இரவு மர்ம முறையில், டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் இறந்து கிடந்தார். அவரின் மரணம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் இறந்த செய்தி வந்த சில மணி நேரங்களில், நேற்றிரவு, மத்திய அமைச்சர் சசி தரூர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.சி.யூ வார்டில் வைக்கப்பட்டார்.

இன்று தான், ஐ.சி.யூ வில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

சசி தரூருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக, அவரின் மனைவி சுனந்தா, டிவிட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தினார். இவர் கடந்த இரு நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளவில்லை என்றும், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை எடுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என நம்ப படுகிறது. அவருடைய உடல் இன்று போஸ்ட் மார்டெம் செய்யப்பட இருக்கிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media