நாடாளுமன்ற மக்களவைத் தேர்ததில், தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க உருப்படாமல் போகும் என்று மு.க. அழகிரி, புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து கருணாநிதி, அழகிரியின் கருத்துக்கும், தி.மு.கவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தேமுதிகவுக்கும், திமுகவுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான் என்றும் கூறினார்.
கட்சியில் அழகிரி இருந்தால் கூட்டணிக்கு வருவதற்கு விஜயகாந்த் தயக்கம் காட்ட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டே அவரை உடனடியாக நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் மலேசியாவில் விஜயகாந்துடன் திமுக சார்பில் கூட்டணிப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் மு.க.அழகிரியை வைத்துக் கொண்டு எப்படி கூட்டணிக்குள் வருவது? என்று விஜயகாந்த் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயும் கூட தற்போது அழகிரி நீக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தான், இன்று காலை திமுக தலைவர் கருணாநிதிக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே கோபாலபுரம் இல்லத்தில் மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் இறுதியில் கருணாநிதியின் அறையிலிருந்து அழகிரி மிகக் கோபத்துடன் வெளியேறியதாகவும், பின்னர் அன்பழகனை அழைத்து உடனடியாக அழகிரியை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்க செய்யும் படி உத்தரவை வெளியிட கருணாநிதி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.