விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் மீறி தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது, அம்மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
144 தடையை மீறி நடைபெறும் போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என கேஜ்ரிவால்முதலில் கூறியிருந்தார். பின்னர் பொதுமக்கள்,, அரசு ஊழியர்கள், மற்றும் நேர்மையான போலீசாரையும் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். டெல்லியின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது. போராட்டத்தை அங்கிருந்து ஜந்தர் மந்தருக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கேஜ்ரிவால் ஏற்கவில்லை.
தர்ணாவில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் என ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மீது நேற்று டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது. இதையடுத்து, கேஜ்ரிவால் மீதும் 144 தடையை மீறி டெல்லி ரயில் பவனில் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தியதற்காக, அம்மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
144 தடையை மீறி நடைபெறும் போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என கேஜ்ரிவால்முதலில் கூறியிருந்தார். பின்னர் பொதுமக்கள்,, அரசு ஊழியர்கள், மற்றும் நேர்மையான போலீசாரையும் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். டெல்லியின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது. போராட்டத்தை அங்கிருந்து ஜந்தர் மந்தருக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கேஜ்ரிவால் ஏற்கவில்லை.
தர்ணாவில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் என ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மீது நேற்று டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது. இதையடுத்து, கேஜ்ரிவால் மீதும் 144 தடையை மீறி டெல்லி ரயில் பவனில் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தியதற்காக, அம்மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.