மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கம், திமுகவில் முற்றியது சகோதரயுத்தம்
புதியதலைமுறை டிவியில் திமுக தலைமையை எதிர்த்து பேசியதை தொடர்ந்து கட்சியினுள் சலசலப்பு ஏற்பட்டது, திமுக தலைவர் கருணாநிதியே விஜயகாந்த் கூட்டணிக்கு கெஞ்சாத குறையாக அழைப்பு விட்டுக்கொண்டிருந்த போது அதை கெடுக்கும் விதமாக விஜயகாந்தை விமர்சித்தார் அழகிரி. இதை தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் இருந்த மதுரை மாவட்ட திமுகவையை கூண்டோடு கலைத்தார்கள், அந்த இடத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்களை நியமித்தார்கள்.
தந்தையை காண தனையன் கோபாலபுரம் சென்றும் கோமகனுடன் சந்திப்பு நடைபெறவில்லை, அதன் பின் சில நாட்கள் கழித்தே சந்திக்க அனுமதி கிடைத்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார், ஸ்டாலின் கனிமொழி அழகிரி மூவரையும் கூப்பிட்டு வைத்து பேச்சு நடத்தியும் முடிவெதுவும் எட்டவில்லை.
இந்நிலையில் முக அழகிரி ஆதரவாளர் ஒருவர் மாநகர பொறுப்பில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தார், இதை அடுத்து பிரச்சினை பெரிதாக வெடித்தது.
இந்நிலையில் இன்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கட்சிக்கு எதிராக துரோக செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கையை அழகிரி விமர்சித்தார். மேலும் தி.மு.க செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று அழகிரி கூறினார். இதனால், தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறினார்.
#மதுரை பொதுசனங்களே சூதானமாக இருந்துகொள்ளுங்கள்
புதியதலைமுறை டிவியில் திமுக தலைமையை எதிர்த்து பேசியதை தொடர்ந்து கட்சியினுள் சலசலப்பு ஏற்பட்டது, திமுக தலைவர் கருணாநிதியே விஜயகாந்த் கூட்டணிக்கு கெஞ்சாத குறையாக அழைப்பு விட்டுக்கொண்டிருந்த போது அதை கெடுக்கும் விதமாக விஜயகாந்தை விமர்சித்தார் அழகிரி. இதை தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் இருந்த மதுரை மாவட்ட திமுகவையை கூண்டோடு கலைத்தார்கள், அந்த இடத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்களை நியமித்தார்கள்.
தந்தையை காண தனையன் கோபாலபுரம் சென்றும் கோமகனுடன் சந்திப்பு நடைபெறவில்லை, அதன் பின் சில நாட்கள் கழித்தே சந்திக்க அனுமதி கிடைத்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார், ஸ்டாலின் கனிமொழி அழகிரி மூவரையும் கூப்பிட்டு வைத்து பேச்சு நடத்தியும் முடிவெதுவும் எட்டவில்லை.
இந்நிலையில் முக அழகிரி ஆதரவாளர் ஒருவர் மாநகர பொறுப்பில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தார், இதை அடுத்து பிரச்சினை பெரிதாக வெடித்தது.
இந்நிலையில் இன்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கட்சிக்கு எதிராக துரோக செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கையை அழகிரி விமர்சித்தார். மேலும் தி.மு.க செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று அழகிரி கூறினார். இதனால், தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறினார்.
#மதுரை பொதுசனங்களே சூதானமாக இருந்துகொள்ளுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.