மு.க. அழகிரி, கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, தி.மு.க வில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். அவர் நீக்கப்பட்டிருப்பதால் அக்கட்சி மீதான 'குடும்ப அரசியல்' பழி துடைக்கப்பட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, கட்சிக்கு ஆரோக்கியமான முடிவு என்றும் கூறினார்.
"தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந்த நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது. " என்று தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.