BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 12 February 2014

அகமதாபாத் டீக்கடையிலிருந்து மோடி பிரச்சாரம் - 1000 டீக்கடைகளில் நேரடி ஒளிபரப்பு

மோடி பிரதமராக முடியாது, வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டத்தில் தேநீர் விற்கட்டும் என்று ஜனவரி மாதம் மணி சங்கர் அய்யர் கூறியது சர்ச்சைக்குள்ளானது. தன் மீது எரியப்படும் கற்களை வைத்து, கட்டிடம் கட்ட தெரிந்தவர் போல் இருக்கிறார், மோடி. இன்று அவர் மேற்கு அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் காதியா டீக்கடையிலிருந்து தனது பிரச்சாரத்தை அதிரடியாக மேற்கொண்டார்.

தேநீர் பருகியபடி ஒரு விவாதம் என்ற இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். வீடியோ கான்பரன்சிங் மூலம் டீக்கடைகளிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் மோடி பதிலளித்தார். அப்போது ஊழல், நல்லாட்சி உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

# மோடி, காங்கிரஸாரின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்து நடத்திய பிரச்சாரம், பாராட்டுக்குரியது என்று நினைத்தால், 'லைக்' போடுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media