BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 12 February 2014

அர்விந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு, அதிர்ச்சி அடைந்த‌ ரிலையன்ஸ்


இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தியோரா, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீது கூறப்படும் புகார்கள் ஆதரமற்றவை என்றும் மறுப்பு கூறியுள்ளது. டெல்லி முதல் அமைச்சர்அர்விந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு வீரப்ப மொய்லி கண்டனம் தெரிவித்ததோடு கெஜ்ரிவாலுக்கு நிர்வாகம் குறித்து தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

எரிவாயு தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்தி, ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் விலை ஏற்றம் செய்யப்பட்டிருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையிலேயே, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media