இந்தியா-வங்கதேச எல்லையில் கடத்தல் பொருட்களை எடுத்து வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்களே என்ற காரணத்தாலும், எல்லையில் ஆண் வீரர்கள் இருப்பதால் அவர்களால் சந்தேகத்திற்கிடமாக வரும் பெண்களை சோதனை செய்ய முடியவில்லை என்பதாலும், இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் பெண்களை சோதனை செய்ய விரைவில் பெண் எல்லை பாதுகாப்பு படையினர் நியமிக்க பட இருக்கின்றனர்.
இதையடுத்து, வங்கதேசத்துடனான திரிபுரா எல்லையில் முப்பது பெண் பாதுகாப்பு படையினரும், அஸ்ஸாம் எல்லை பகுதிக்கு மற்றுமொரு முப்பது பேரும் விரைவில் பணியில் அமர்த்தப் படயிருக்கின்றனர். அவர்கள் எல்லை வழியாக வரும் சந்தேகப்படும்படியான பெண்களிடம் சோதனை செய்வதுடன் விசாரணை நடத்துவார்கள்.
ஏற்கனவே மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் எல்லையில் பெண் எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.