BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 12 February 2014

பெண், தன் மீது புகார் கொடுத்ததை அடுத்து, தற்கொலைக்கு முயன்ற அமைச்சர்

பெங்களூரில், முன்னாள் பாஜக அமைச்சர் எஸ்.ஏ. ராமதாஸ் திருமணம் ஆகாதவர். ஆனால் சமீபத்தில் ஒரு பெண், ராமதாஸ் தனது கணவர் என்றும், தன்னை பல ஆண்டுகளாக அவர் கொடுமைப்படுத்துவதாகவும் புகார் கொடுத்து இருக்கிறார். இதையடுத்து, ராமதாஸ் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.

தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக தன்னை ராமதாஸ் கொடுமைப்படுத்துவதாகவும், தன் வாழ்க்கையை அவர் நாசம் செய்ததாகவும், அந்த பெண் அளித்த புகாரினால், மைசூரில் தான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் உள்ள அறையில் ராமதாஸ் தூக்கில் தொங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைப் பற்றி புகார் கொடுத்த பெண் பேசுகையில், "எனக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்க தான் செய்தியாளர்களை சந்தித்தேன். நான் செய்தியாளர் சந்திப்பில் இருந்தபோதே அமைச்சர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு இந்த பேட்டியை உடனே முடித்துக் கொள்ளாவிட்டால், விஷம் குடித்துவிடுவேன் என்று மிரட்டினார். அவர் என்னை பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார்." என்று கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media