ராபின் என்ற 32 வயது பெண், கடந்த டிசம்பர் மாதம் மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார். இவரின் மூளை இனிமேல் இயங்காது என்று தெரிந்தும், அவரின் கணவர், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை குழந்தை பிறக்கும் வரையிலாவது, 'லைப் ச்ப்போர்ட்'டில் வைக்கும் படி கேட்டு கொண்டார். இதையடுத்து, ஆறு வாரங்கள் கழித்து, மூளை சாவு அடைந்தும், லைப் சப்போர்ட்டில் வைக்கப் பட்டிருந்த ராபினுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு, லைப் சப்போர்ட் எடுக்கப் பட்டதால், ராபின் மரணம் அடைந்தார்.
குறை பிரசவத்தில் பிறந்தாலும், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக, அதன் தந்தை பென்சன் தெரிவித்தார். இவர் மனைவிக்கு ஆன மருத்துவ செலவுகள் மற்றும் குழந்தையை பார்த்து கொள்ள ஆகும் செலவுகளை பார்த்து கொள்ள, இதுவரை அவருக்கு 84 லட்ச ரூபாய்க்கு மேல் நன்கொடை மக்களிடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.