BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 25 February 2014

தாயை அடித்து முன்பல்லை உடைத்தவருக்கு பொதுமக்கள் முன்பு 2400 கசையடிகள், 5 ஆண்டுகள் சிறை, அவருக்கும் பல் உடைக்கப்படும் என தீர்ப்பளித்த நீதிமன்றம்

சவூதி அரேபியாவைச் சேர்ந்த 30களில் இருக்கும் நபர் ஒருவர் தனது தாயுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட விவாதத்தில், ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது தாயை அடித்துள்ளார். இதனால் தாயின் முன் பல் உடைந்துவிட்டது. இதையடுத்து தன்னை மகனிடம் இருந்து காப்பாற்றுமாறு அந்த தாய் சோதனைச்சாவடியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். தாயை தாக்கிய மகனை போலீசில் ஒப்படைத்து,  மெக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர். தனது தாயை அடித்து பல்லை உடைத்ததை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை, 2,400 கசையடி, ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒரு முறை பொதுமக்கள் முன்பு அவருக்கு 40 கசையடிகள் கொடுக்கப்படும், அவரது பல் ஒன்றும் உடைத்து எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media