BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 25 February 2014

இந்தியாவில் காவலர் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிற மாநிலம், தமிழ்நாடு



இந்தியாவில் காவலர் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிற மாநிலம், தமிழ்நாடு. 2012ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 58 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் அவர்கள் அதிக நேரம் செலவிடுவதும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்கவில்லை என்பதாலும் ஏற்படும் மன அழுத்தமே அவர்களை தற்கொலைக்கு தூண்டும் காரணங்கள் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். மன உளைச்சலுக்கு ஆளாவதில் ஆண்களை விட, பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் பெண்கள் அவற்றை எளிதில் கடந்து விடுகின்றனர், ஒருசிலர்தான் தற்கொலை வரை செல்கின்றனர் என கூறப்படுகிறது.

காவலர்களுக்கு தங்கள் உரிமைகளைக் கேட்க அமைப்பு கிடையாது. காவலர்களின் பிரச்னையை மேலோட்டமாகப் பார்க்காமல், அவர்களின் தேவைகள் என்ன, அவற்றை நிறைவேற்றுவது எப்படி என ஆக்கப் பூர்வமாக செயல்பட வேண்டியது அரசின் கடமை. தமிழக அரசு, காவல்துறையினரின் மனநலத்தைக் காக்க கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media