சென்னையில் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் 65 வங்கிகளில் சில்லறை மெஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை செலுத்தி 1, 2, 5 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம். சில்லறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாடு முழுவதும் ‘காயின் வெண்டிங் மெஷின்களை’ ரிசர்வ் வங்கி அமைத்து வருகிறது. சென்னையில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்பட அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சில்லறை மெஷின் வைக்கப்பட்டுள்ளன.
ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்கள் வெளியேற இந்த மெஷினில் 3 துவாரங்கள் இருக்கின்றன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை உள்ளே செலுத்தினால் அந்த துவாரங்கள் வழியாக சில்லறைகளை பெற்றுக்கொள்ளலாம். இது பயனுள்ள வகையில் இருப்பதாக பொதுமக்கள் பலரும் கூறுகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.