BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 25 February 2014

இசையமைப்பாளர் ரஹ்மானை 'ஜீனீயஸ்' என்று புகழும் மத்திய அமைச்சர் கபில் சிபல்


மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் கபில் சிபல் அரசியல்வாதி மட்டும் அல்ல, ஒரு கவிஞரும் கூட‌. இவர் எழுதிய கவிதைகள் இப்போது பாடல்களாக வடிவம் பெற்றுள்ளன.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள ரானாக் என்ற ஆல்பத்தில் கபில் சிபலின் கவிதை வரிகள் இடம் பெற்றுள்ளன. இது பற்றி கபில் சிபல் கூறுகையில், "எனது கவிதைகளை இசையாக மாற்றுவதற்கு ரஹ்மானை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவரது தனிப்பட்ட பணி நேர்த்தி மற்றும் வேறுபட்ட மெல்லிசைகளை படைப்பதில் உள்ள அவரது விருப்பம் ஆகியவையே ஆகும். ரஹ்மான் ஒரு ஜீனியஸ். அவரது இசையில் எனது வார்த்தைகள் அதனுடைய ஆத்மாவை கண்டுள்ளன." என்றும், மேலும் ரஹ்மானை பற்றி பேசிய அவர்,  "ரஹ்மானின் படைப்புகள் புதிதாகவும் பாலிவுட் பாணியிலிருந்து மாறுபட்ட உணர்வையும் கொண்டவை. அவரது குரல் மற்றும் அதன் தன்மை ஆகியவை ஒழுங்கான வடிவத்தை கொண்டுள்ளது. " என்று இசைப்புயலை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் அமைச்சர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media