நாளை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 66 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்படுகிறது. தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட அளவில், கொண்டாட்டங்களுக்கு அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்த முடிவினால், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றிருப்பதனால், அதிமுகவினர் மத்தியில் கூடுதல் உற்சாகம் காணப்படுகிறது.
மேலும், ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி இனிப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கோவில்களில் அன்னதானம், தேர் இழுத்தல், சிறப்புப் பூஜைகளுக்கும் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்துள்ளனர். பாடியில் உள்ள பிரபல சிவன் கோவிலில் 6666 பேருக்கு சிறப்பு அறுசுவை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தலைநகர் டெல்லியிலும், மும்பையிலும் மேலும் பல நகரங்களிலும் அதிமுக வின் பல்வேறு அணிகள் சார்பில் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.