BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 23 February 2014

முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார், கண்ணீரால் அவருக்கு நன்றி சொல்வோம்


தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் உள்பட சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்ட ஜெயலலிதா அவர்களுக்கு, உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பாரதிராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்தும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார் என்று அவர் கூறினார்.

அக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசும் போது, தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என்று அவர் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media