BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 23 February 2014

ஜெ. பேனர்களை எடுக்க கோரி, நடு ரோட்டில் படுத்து 'டிராபிக்'கை ஸ்தம்பிக்க வைத்த ராமசாமி


அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள், நேற்று கடற்கரை காமராஜர் சாலை முழுவதும் பெரிய பெரிய பேனர்களை , முறையான அனுமதி பெறாமல், முதல்வர் ஜெயலலிதாவிற்காக வைத்திருந்தனர். அங்கு வந்திருந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சாலையில் திடீரென படுத்தார். உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் இப்படியே படுத்திருப்பேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. போலீஸார் அவரை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தனர். ஆனால் அவர் சமாதானமாகவில்லை. பேனர்களை அகற்றினால் தான் எழுந்திருப்பேன் என்று கூறிவிட்டார். வாகனங்கள் சாலையில் தேங்க ஆரம்பித்தன. இதைப் பார்த்த போலீஸார் வேறு வழியில்லாமல் பேனர்களை அகற்ற ஆட்களை வரவைத்தனர். அவர்கள் வந்து பேனர்களை அகற்றினர். அதன் பின்னரே ரோட்டிலிருந்து எழுந்து சென்றார் டிராபிக் ராமசாமி.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media