அனில் அம்பானி தனது தாய் கோகிலாபென் அம்பானியின் 80வது பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டிக்கு தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் பார்ட்டிக்கு வந்திருந்தார்.
அம்பானி வீட்டு விசேஷங்கள் என்றால் பச்சன் குடும்பத்தினர் நிச்சயம் வந்து விடுவர். அன்று நடந்த பார்ட்டிக்கும், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் வந்திருந்தனர். பார்ட்டி முழுவதும் ஐஸ்வர்யா ராய், மாமியார் ஜெயா பச்சன் இருக்கும் பக்கமே போகாமல் இருந்தார். அவர் பொது இடத்தில் மாமியாரை தவிர்த்ததை பலரும் கவனித்துவிட்டனர். ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியாருக்கும் இடையே ஒத்துப் போகவில்லை என்று அண்மையில் செய்திகள் வெளியாகின. திருமணம் ஆனதில் இருந்து ஐஸ்வர்யா தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சனுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். இந்நிலையில் மாமியாரின் செயல்கள் பிடிக்காததால் அவர் கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் தனிக்குடித்தனம் செல்வார் என்று செய்திகள் வெளியாகின.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.