BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 February 2014

அன்று: அமெரிக்க விசா மோடிக்கு மறுப்பு, இன்று: மோடியை சந்திக்க அமெரிக்க தூதர் விருப்பம்

குஜராத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை காரணம் காட்டி, நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வருகிறது. மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்ட பிறகும், தனது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

சமீப காலமாக, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  வருகிறார். அவர் பேசும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவரது பேச்சை ஆங்கில டி.வி. சேனல்கள் தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் மோடியின் செல்வாக்கு அதிகரித்து வருவது போல் இருக்கும் நிலையில், அவர் இந்தியாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்புகள் மிக அதிகம் எனவே பலரும் நம்புகின்றனர்.

இந்நிலையில், மோடியை நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து, அதற்கான அனுமதியை எதிர்பார்த்து இந்தியாவுக்கான அமெரிக்க உயர் தூதர் நான்சி பொவெல் தூது அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர், ‘கடந்த நவம்பர் மாதம் முதல் இந்திய-அமெரிக்க நல்லுறவை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோருடனான தொடர்புகளை பெருக்கிக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சியின் ஒரு கட்டமாக மோடி-பொவெல் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன’ என்று தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media