தற்போதைய அரசியல் நிலவரங்களை பற்றி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சோ, ஒருவேளை, பா.ஜ.க-வால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலோ, மற்ற கட்சிகள் பா.ஜ.க-வை ஆதரிக்க முன்வராவிட்டாலோ அந்தக் கட்சி வேறு யாரையாவது ஆதரிப்பதைவிட, முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிக்கலாம் என்று கூறினார். இதுப்பற்றி மேலும் பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கே தேவை இருக்காது என்றே நினைக்கிறேன். பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும்பான்மை பலத்தை நெருங்கிவிடும். சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க-வால் ஆட்சி அமைக்க முடியும்." என்று அவர் கருத்து தெரிவித்தார்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. வலுவான கட்சியாக இல்லை என்ற போதிலும், மோடி அலையைத் தமிழகத்தில் உணர முடிகிறது என்று சோ கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி குறித்து பேசுகையில், டெல்லியைத் தவிர்த்து, ஏனைய இடங்களில் அக்கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியை மக்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை என்றும் சோ தெரிவித்தார்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. வலுவான கட்சியாக இல்லை என்ற போதிலும், மோடி அலையைத் தமிழகத்தில் உணர முடிகிறது என்று சோ கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி குறித்து பேசுகையில், டெல்லியைத் தவிர்த்து, ஏனைய இடங்களில் அக்கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியை மக்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை என்றும் சோ தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.