BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 February 2014

கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குக: முத்கல் கமிஷன்


கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் ஐபிஎல் அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டது. இது குறித்து, உச்ச நீதிமன்றம் நியமித்த, முத்கல் தலைமையிலான‌ விசாரணை குழு, பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மையே என்று தெரிவித்தது.

மேலும், கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்திடம் முத்கல் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

#  கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 'லைக்' போடுங்கள்!
#  கிரிக்கெட் சூதாட்டம் தவறு என்று நினைப்பவர்கள், உங்கள் கருத்தை, கமென்ட் செய்யுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media