BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 February 2014

48 வயது பெண் கற்பழிக்கப்பட்டு, கற்களால் அடிக்கப்பட்டு கொலை

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது ஷுகர்தல் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் அருகே வளையல்கள் உடைந்து கிடந்தன. அவரை அடித்து கொலை செய்வதற்கு முன்பு, யாரோ பாலியல் பலாத்காரம் செய்து அதன் பிறகு கல்லால் அடித்துக் கொன்றிருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகின்றனர்.

போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media