BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 February 2014

சிங்கப்பூர் கலவரம்: தமிழருக்கு 15 வார சிறை

சிங்கப்பூரில், லிட்டில் இந்தியாவில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர் சின்னப்பா விஜயரகுநாத பூபதி என்ற 32 வயது நபருக்கு 15 வார சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் மீது முன்னதாக, வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குப் போடப்பட்டிருந்தது. அந்த பிரிவில் விசாரணை நடந்திருந்தால் அவருக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், சவுக்கடியும் கிடைத்திருக்கும். ஆனால் அவருக்கும், கலவரத்திற்கும் மிகப் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்பதால் சட்டப் பிரிவு சாதாரணமானதாக மாற்றப்பட்டது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லிட்டில் இந்தியா பகுதியில் டிசம்பர் 8ம் தேதி பெரும் மோதல் வெடித்தது. ஒரு விபத்தைத் தொடர்ந்து நடந்த மோதலால் பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதையடுத்து இந்தியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 25 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் தற்போது முதல் தீர்ப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media