BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 February 2014

பங்கு சந்தையில் ரிலையன்ஸ் சரிவு, முகேஷ் அம்பானி மீது அர்விந்த் கெஜ்ரிவால் அரசின் வழக்கு எதிரொலி

பங்கு சந்தையில் ரிலையன்ஸ் சரிவு, ரிலையன்ஸ் கோட்டையின் முதல் செங்கல்லை உருவிய அர்விந்த் கெஜ்ரிவால்.

இயற்கை எரிவாயு விலை நிர்ணயத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் தலைவர் முகேஷ் அம்பானி, அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, ஆகியோர் மீது வழக்குத் தொடர டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் இயற்கை எரிவாயு விலையை உயர்த்த அரசை கட்டாயப்படுத்துகிறது. இல்லாவிட்டால் தங்களின் உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என்று சில்லறை வியாபாரிகளைப்போல் அவர்கள் அரசுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய அர்விந்த் கெஜ்ரிவால்  ஊழல் தடுப்பு பிரிவுக்கு இவர்கள் மீது வழக்கு தொடுக்க உத்தரவை பிறப்பித்தார்.

இதனையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் பங்குகள் இறங்க ஆரம்பித்தன, இன்று 2.26% வரை பங்கு விலைகள் குறைந்தன. சென்ற வாரம் தான் அனில் அம்பானியின் மின் நிறுவனங்களை கடுமையாக கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

பாஜக அரசாக இருந்தாலும், காங்கிரஸ் அரசாக இருந்தாலும் ரிலையன்ஸ் வைத்தது தான் சட்டம், அவர்கள் செய்வது தான் பிசினஸ் என்று இருந்த நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் துணிச்சலாக இந்த ஊழல் தொழில் நிறுவனங்கள் மீது கைவைத்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

# அர்விந்த் கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையை வரவேற்றால் ஒரு லைக் போடுங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media