சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மதியம் அங்கிருந்து தனது இல்லத்திற்கு புறப்பட்ட கருணாநிதி, நிருபர்களை சந்தித்தார்.
அப்பொழுது ஜெயலலிதா 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பதாக நேற்றையதினம் பெங்களூரில் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே என்று கேட்கப்பட்ட போது, அதற்கு கருணாநிதி, " ஏறத்தாழ 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாக நேற்றையதினம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் எடுத்து தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி பற்றி தமிழ்நாட்டு பத்திரிகைகள் குறிப்பாக சென்னையில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலை ஏடுகள் என்று தங்களை சொல்லி கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாததின் காரணம் என்ன?. சூட்சுமம் என்ன?. ரகசியம் என்ன? நடந்த பேரம் தான் என்ன?" என்று கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.