BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 26 March 2014

ஆ.ராசாவை மாட்டி விட்டு தப்பித்த காங்கிரஸ், நன்றி மறக்கும் காரணத்தாலே பாதாளத்தில் விழுந்தது-கருணாநிதி


மக்களவை தேர்தலை முன்னிட்டு வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில். “2ஜி அலைக்கற்றை ஊழலில் தி.மு.க.வின் ராசாவை மாட்டிவிட்டு காங்கிரஸ் தப்பித்து விட்டது. அதோடு மட்டுமில்லாது எங்களையும் தனித்து விட்டுவிட்டது. ஆனால், தற்போது ராசா குற்றமற்றவர் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நன்றி மறந்து விட்டது. பல கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அக்கட்சி தற்போது யாரை பழி வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. இதுவே அக்கட்சியின் வீழ்ச்சிக்கும் அதன் மதிப்பு இழந்ததற்கும் காரணம். முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் சிறப்பாக இருந்த காங்கிரஸ், தற்போது அதலபாதாளத்தில் விழுந்து கிடப்பதற்கு அதன் நன்றி மறந்த குணமே காரணம்” என்று தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media