BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 26 March 2014

இந்தியாவின் எதிரிகள்: ஏ.கே 47, ஏ.கே.அந்தோணி, அரவிந்த் கெஜ்ரிவால்(ஏ.கே. 49): மோடி


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு தழுவிய 'பாரத் விஜய்' என்ற பிரச்சார பேரணியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் துவங்கினார். அப்பொழுது அவர், மூன்று ஏ.கே.-க்கள் இந்திய நாட்டின் எதிரிகளாக உள்ளனர். ஒன்று ஏ.கே 47 ரக துப்பாக்கி, மற்றொன்று ஏ.கே.,47-களுடன் வலம் வரும் ஏ.கே.அந்தோணி, 3-வது அரவிந்த் கெஜ்ரிவால் (ஏ.கே.49). இவர்கள் 3 பேரும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருபவர்கள்." என்று கூறினார்.

மேலும் மோடி பிரச்சார பேரணியின் போது, "காஷ்மீர்வாசிகள் பாகிஸ்தானுடன் இணைவது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் சொல்கிறார். இவர்களின் வெப்சைட்டில் காஷ்மீர், இந்தியாவில் இடம்பெறாத வண்ணம் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாவின் எதிரிகள். இவர்கள் பாகிஸ்தானுக்கு உதவியாக செயல்படுகின்றனர்." என்று கடுமையாக சாடி பேசினார்.

காங்கிரஸை தாக்கி பேசிய மோடி, "இளவரசர் ராகுல் சொல்கிறார், இந்த நாட்டை முன்னேற்ற நினைக்கிறோம் என்று. நான் சொல்கிறேன்... ராகுல் இந்த நாட்டை அழித்து வருகிறார். இங்கு முதலில் நான் வைஷ்ணவி தேவி முன் வணங்கினேன். இப்போது மக்கள் நீதிமன்றத்தில் வணங்கி கேட்கிறேன். எத்தனை ஆண்டு காலம் நீங்கள் வாரிசு அரசியல் நடத்துவீர்கள்? வாரிசு அரசியல் இந்த நாட்டின் எதிரியாக உள்ளது." என்றும் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media