வாரணாசியில் நேற்று ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அத்தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அவர் மீது நேற்று அங்கு சிலர் மையை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் இன்று கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து திக்விஜய் சிங் கூறுகையில், “நான் கெஜ்ரிவாலின் ரசிகன் இல்லை. அவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் முட்டாள்தனமாக மட்டும் பேசும் நபர். ஆனால் கெஜ்ரிவால் மீதான மை தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது பாசிசவாதிகளின் வழியாகும். பா.ஜ.க. ஒரு பாசிச கட்சி, அந்த கட்சிதான் இதுபோன்ற வேலையை செய்கிறது.
நரேந்திர மோடி ஒருபோதும் பிரதமராகவே முடியாது.”
இவ்வாறு திக்விஜய் கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.