காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, "கடந்த 2004-ல் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பலூன் அடங்கியது போலவே இப்போதும் பாஜக பலூன் வெடித்துச் சிதறப்போவது உறுதி. " என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவது, இந்தியாவுக்கு தீங்கு தரும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மோசமான தோல்வி அடையப் போவதாக சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கு மாறாகவே தேர்தல் முடிவுகள் அமையும். அப்போது, அனைவரும் மிரண்டு போவார்கள்.
காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடையும் என்றும், எங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அலை இருக்கிறது என்றும் 2009-ல் கூட கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், முடிவுகள் அவற்றைப் பொய்ப்பித்தன. உத்தரப் பிரதேசத்தில் வெறும் 5 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால், அந்த மாநிலத்தில் 22 தொகுதிகள் பெற்றோம்"
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.