BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 26 March 2014

பதவி மீது ஆசை இருந்தால் நான் ஏன் முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்?



வாரணாசி தொகுதியில் பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், அத்தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது பேசியதாவது:

பலர் நான் பதவியை விட்டு ஓடிவிட்டதாக கூறுகின்றனர். நான் சில கொள்கைகளுக்காகவே பதவியை விட்டு விலகினேன். கடவுள் ராமர் அவருடைய தாயாரால் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு அனுப்பப்பட்டார். அதை எல்லோரும் ஆதரித்தார்கள். பா.ஜ.க. அப்போது இருந்திருந்தால் கடவுள் ராமரையும் கூட ஓடிப்போனதாகவே கூறியிருப்பார்கள்.

அரசியல் கொள்கைகள், தியாகம் என்றால் என்னவென்றே பா.ஜனதா கட்சிக்கு தெரியாது. நான் சவால் விடுகிறேன். பா.ஜ.க.வில் யாராவது பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடியுமா?

பதவி மீது ஆசை இருந்தால் நான் ஏன் முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்? காங்கிரசும் பா.ஜ.க.வும் சேர்ந்து என்னுடைய லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. அதனால்தான் பதவியை விட்டு விலக நேரிட்டது.

ரயில்வே மந்திரி பதவியிலிருந்து ராஜினாமா செய்த அப்போதைய லால் பகதூர் சாஸ்திரியானாலும் சரி, 14 வருடங்கள் வனவாசம் சென்ற ராமர் ஆனாலும் சரி யாரையும் பா.ஜ.க. விட்டுவைக்கப்போவதில்லை. ரயில் விபத்தின் காரணமாகவே அப்போதைய லால் பகதூர் சாஸ்திரி ரயில்வே மந்திரி பதவியிலிருந்து விலக நேரிட்டது. கடவுள் புண்ணியத்தில் அப்போது பா.ஜ.க. இருக்கவில்லை. இருந்திருந்தால் அவர்களையும் கூட ஓடிப்போனதாக தான் கூறியிருப்பார்கள்.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசியிருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media