BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 3 March 2014

முகநூலில் போட்டி போட்டு கொண்டு திட்டி கொள்வது, சண்டை போடுவதை விடுங்கள் - ஸ்டாலின்


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இணைந்துள்ளார். இணையதள பிரச்சாரம் குறித்து நேற்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

 மாறுபட்ட கருத்துகளைக் கொண்டு, இணைய தளத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு பதிலளிப்பது, தனிமனித விருப்பு, வெறுப்பு அடிப்படையிலான செயல் பாடுகளேயன்றி, அவை கட்சிப் பணிகள் அல்ல. மாறாக ஊறு விளைவிக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. எனவே, இத்தகைய செயல்பாடுகளை அனைத்து சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் தவிர்க்க வேண்டும். கட்சிக்கும், கருணாநிதிக்கும் பெருமை சேர்க்கும் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாற்றுக் கட்சியினரும் எதிரிகளும் நம் மீது சுமத்தும் அவதூறுகளை பொடிப்பொடியாக்கிடும் விதத்தில், உண்மைத் தகவல்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிய வேண்டும்.

பெரியார், அண்ணா போன்ற இயக்கத்தின் பெரும் தலைவர்களும் அவர்களுக்குத் துணையாக பாடுபட்ட தலைவர்களும், சமுதாய உயர் வுக்காக பாடுபட்ட வரலாற்று நிகழ்வுகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சியின் சாதனைகளையும், மத்திய அரசிடம் வாதாடி, போராடி தமிழகத்துக்கு கருணாநிதி பெற்றுத்தந்த பலன் களையும் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media